உத்திரபிரதேசத்தில் உள்ள பரேலி நகரில் உள்ள பகுதியில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக பள்ளி மாணவி ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் பைக்கில் பின் தொடர்ந்து உள்ளார். அப்போது தனியாக சென்ற மாணவியிடம் அந்த வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதோடு மாணவியின் அந்தரங்கப் பகுதிகளை தொட்டு துன்புறுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி கத்தி கூச்சலிட்டார். ஆனால் யாரும் வரவில்லை. இதனால் அந்த இளைஞர் மாணவியை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு இளைஞர் தப்பி சென்றார். வீட்டிற்கு திரும்பிய அந்த மாணவி நடந்த விஷயங்களை தனது பெற்றோர்களிடம் அழுது கொண்டே கூறினார். இது பற்றி அந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

“>

 

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி உதவியுடன் அந்த நபரை கண்டறிந்தனர். அவர் முஸ்பீர்(22) என்று அடையாளம் காணப்பட்டு அவருடைய பைக்கின் எண்ணை வைத்து கண்டறிந்தனர். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்ய சென்றபோது அந்த வாலிபர் துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுட முயன்றார். இதனால் தற்காப்புக்காக காவல்துறையினர் அவரது காலில் சுட்டு பிடித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.