
சென்னை நெற்குன்றம் பகுதியில் பெண் ஒருவர் திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது முகநூலில் சரவண விக்ரம் என்ற நபர் அறிமுகமாகி உள்ளார். அப்போது அவர் நெற்குன்றம் பெண்ணுடன் மிகவும் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தி அவருடன் ஆபாசமாக வீடியோ காலில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த வாலிபர், அப்பெண்ணின் வாட்ஸ்அப்புக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி அதைப்போன்று செயல்பட வேண்டும் என்று அவர் மிரட்டி இருக்கிறார்.
தனக்கு 2 மகள்கள் இருப்பதால் பயந்து போன அவர் தூத்துக்குடி வாலிபர் உடனான தொடர்பை துண்டித்துள்ளார். இருப்பினும் அவர் பெண்ணின் சகோதரியை தொடர்பு கொண்டு என்னுடன் உங்கள் தங்கை தொடர்பில் இல்லாவிட்டால் அவரது புகைப்படங்களையும், 2 மகள்களின் போட்டோக்களையும் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார். ஆனால் அந்த பெண் மறுத்ததால், மகள்களை கொன்று விடுவேன் என்றும் விரட்டி இருக்கிறார்.
இதனால் பயந்து போன அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரின் உண்மையான பெயர் கோபி என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் கோபியை கைது செய்தனர். அவர் 5 பேஸ்புக் மற்றும் 9 இன்ஸ்டாகிராம் பக்கங்கள் பல பெயர்களில் உருவாக்கி இருப்பதும் தெரியவந்தது.
கடந்த 3 ஆண்டுகளாக பல பெண்களுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தனது 11 போலியான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மூலமாக பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர் ஆபாச லீலைகள் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் அடைகின்றனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.