தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அரசன்-விக்டோரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் அஜித் 26 வயதாகும் நிலையில் கூழித்தொழிலையாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பாக ராஜபாளையத்தில் வசித்து வரும் சினேகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின் அவர்கள் இருவரும் அஜித்தின் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த நாளிலிருந்தே அஜித் நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அவரது தாய் விக்டோரியா அஜித்திடம் கண்டித்து பேசினார். அந்த சமயத்தில் அஜித்தின் மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டில் இருந்ததால் அனைவரின் முன்பாக தனது தாய் தன்னை திட்டியதை எண்ணி மனவேதனையில் இருந்த அஜித் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விக்டோரியா காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.