பிரபல இயக்குனர் மணிரத்தினம் அமரர் கல்கியின் புகழ் பெற்ற நாவலை பொன்னியின் செல்வன் என்ற பெயரில் இரண்டு பாகங்களாக பிரம்மாண்ட படமாக உருவாக்கியுள்ளார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் பார்த்திபன் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பொன்னியின் செல்வன் பற்றி வைரலாக பேச வேண்டும் என்றால் ஐடி ரெய்டு பற்றி தான் நான் பேச வேண்டும். 1000 கோடி ரூபாய் எங்கையாவது ரெய்டு பண்ணனும் தோணுச்சுன்னா பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீஸ் ஆகி இருக்கும் தியேட்டருக்கு போங்க. கண்டிப்பா இந்த வாரம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் பார்த்திபனின் பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.