சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் அரிய வகைப் பாம்புகள் பூனைகளை வேட்டையாடும் விடீயோக்கள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சி அடையச் செய்கிறது .

அதேபோன்று சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு காட்டுப் பகுதியில் பாம்பு ஒன்று பூனையை இறுக்கி சுற்றிக்கொண்டு கிடந்தது.

அதனை கவனித்த நபர் ஒருவர் அந்தப் பாம்பிடம் இருந்து பூனையை மீட்டு பாதுகாப்பாக எடுத்துச் சென்று மருத்துவ முதலுதவி செய்து பூனையின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

மேலும் அந்த பூனையின் ஆரோக்கியத்தை தொடர்ந்து கவனித்து அதற்கு உணவு வழங்குவது போன்ற உதவிகளை செய்து உள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் அந்த மருத்துவரை பாராட்டி வருகின்றனர்.