தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நெருப்பூரில் சுகன்யா(34) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த முத்து என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுகன்யா கணவனைப் பிரிந்து தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதையடுத்து தன்னுடைய மகளையும் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்த்து உள்ளார். இதற்கிடையில் முத்துவுக்கும் சுகன்யாவுக்கும் செல்போனில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுகன்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.