
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பேருந்து நிலையம் அருகே ஒதிமலை சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளது. இங்கு வரும் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு சாலையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதால் அருகில் இருக்கும் மன்னீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று 45 வயது மதிக்கத்தக்க நபர் மது குடித்துவிட்டு போதையில் தள்ளாடியபடி மன்னீஸ்வரர் கோவில் அருகே சாலையில் விழுந்து அங்கும் இங்கும் உருண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். ஆனாலும் அந்த நபர் எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.