
தேனி மாவட்டம் சுருளிபட்டி கிராமத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது நண்பர் ராம்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தின் உள்ளே பதுங்கி இருந்த பாம்பு ஒன்று வெளியேறியது. அதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த ஹரிகிருஷ்ணன் பிரேக் பிடித்தார். ஆனால் வெளியேறிய பாம்பு அவரின் மணிக்கட்டு பகுதியில் கொத்தியது.
உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரி கிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது