அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகிமைபுரத்தில் இருக்கும் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து நடத்துகிறது. இந்த முகாமில் அரியலூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருக்கும் முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்நிலையில் 18 வயது முதல் 35 வயது வரையுள்ள 8- ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், ஐ,டி,ஐ டிப்ளமோ, பொறியியல் முடித்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதனையடுத்து வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் www.tnprivatejobs.in.gov.in என்ற இணையதளத்தில் கல்வி தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 04329-228641 என்ற தொலைபேசி எண் அல்லது 9499055914 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.