ஹரியானாவில் கால்வாயில் மாடல் அழகி பிணமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சிமி எனப்படும் மாடல் அழகியான ஷீத்தல் சவுத்ரி கடந்த திங்கட்கிழமை உடலில் காயங்களுடன் பானிபட் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.

போலீஸ் நடத்திய விசாரணையில் கடந்த 14ஆம் தேதி ஷீத்தல் விளம்பர படப்பிடிப்பில் இருந்தபோது, அவருடன் நெருங்கி பழகி வரும் சுனில் என்பவர் சந்திக்க வந்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே மோதல் வெடித்ததும் தெரியதெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று சுனில் தாக்கியதாக தனது தங்கையிடம் ஷீத்தல் கூறியதை சுட்டிக்காட்டியுள்ள போலீசார், ஷீத்தலை கொன்று காரில் கடத்தி சென்று, கத்தியில் சராமாரியாக குத்திக்கொலை செய்து கால்வாயில் வீசியதை சுனில் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கொலை செய்துவிட்டு விபத்தில் சிக்கியதுபோல் நாடகமாடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுனிலை போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மடக்கினர். சுனிலுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், ஷீத்தல் உடன் 7 வருடங்களாக நெருங்கி பழகி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஷீத்தலுக்கும் ஏற்கனவே திருமணமாகி 5 மாத குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.