மும்பையில் கட்டடப் பணி நடைபெற்று கொண்டிருந்த மேம்பாலத்தில் இருந்து கான்கிரிட் பீம் இடிந்து கார் மீது விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பையில் உள்ள மைராசாலையில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அப்போது மேம்பாலத்தில் உள்ள கான்கிரீட் பீம் திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது விழுந்தது. இதில் காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கிய நிலையில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது தொடர்பான வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. அதில் காரில் இருந்த ஓட்டுநர் அதிர்ச்சியில் கீழே இறங்கி வந்து காவல்துறையினருடன் புகைப்படங்கள் எடுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அதோடு மேம்பாலத்தில் வெடித்துக் கொண்டிருக்கும் காங்கீரிட் பகுதி காணப்பட்டது. இந்த வீடியோவை வெளியிட்ட நபர் இந்த சம்பவம் மும்பை மெட்ரோ திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் நடந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சிலர் “அமெரிக்காவில் இப்படி நடத்திருந்தால், ஓட்டுநர் கோடிக்கணக்கில் இழப்பீடு பெற்றிருப்பார். ஆனால் இங்கு அவரே செலவு செய்ய நேரிடும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒருவர் “இது விபத்து என்பதால், மேம்பால திட்டத்தை செயல்படுத்தி வந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

A beam of concrete falls on a car in Mira Road from the ongoing metro work. The driver nearly escaped death.
byu/nyxxxtron inmumbai

“>