
கோயம்புத்தூர் மாவட்ட த்தை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார்- மைதிலி. இவர்களுக்கு கிருத்திக் (14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் 9ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
இவர் கோயம்புத்தூரில் உள்ள சரவணன் பட்டியில் கால்பந்து விளையாட்டு பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அந்த பயிற்சி மையத்தில் கடந்த மே 29ஆம் தேதி மாலை இரு அணிகளுக்கிடையே கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது.
அப்போது அந்தப் போட்டியில் பங்கேற்ற கிருத்திக் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே சரிந்துள்ளார். இதனைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கிரித்திக் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிருத்திக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொணமடு வருகின்றனர். விளையாடிக் கொண்டிருக்கும்போதே சிறுவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.