
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு இயற்கை குகையில் கடந்த 4 ஆண்டுகளாக வாழும் 35 வயது மின் ஹெங்காய் என்ற நபர், திருமணம் பற்றிய தனது கருத்தால் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “உண்மையான அன்பைக் கண்டுபிடிப்பது அரிது.
அத்தகைய விஷயத்திற்காக நான் ஏன் கடினமாக உழைக்க வேண்டும்?” என்ற அவரது வாக்கியம், சீன சமூக ஊடகங்களில் வலுக்கும் விவாதத்திற்கு காரணமாகியுள்ளது. முன்பு ஒரு ரைடு-ஹெய்லிங் ஓட்டுநராக இருந்த மின், மாதம் சுமார் 10,000 யுவான் சம்பாதித்து வந்தார். உறவினர்களின் கடனை அடைக்க ஒரு நாளைக்கு 10 மணி நேரம் உழைத்தார்.
இருப்பினும், தற்போது அவர் 3 லட்சத்து 50 ஆயிரம் யுவான் (சுமார் ₹35 லட்சம்) கடனில் சிக்கியுள்ளார். இதனால், வேலைக்கும் வாழ்க்கைக்கும் அலுத்துப்பட்டு, இயற்கையோடு தனிமையில் வாழவேண்டியதென்று முடிவு செய்துள்ளார். தனது சொத்துக்களை விற்று, ஒரு குகையை 5 லட்ச ரூபாய் செலவில் வீட்டாக மாற்றியுள்ளார்.
தினமும் காலை 8 மணிக்கு எழுந்து, விவசாய வேலை, வாசிப்பு மற்றும் நடைப்பயிற்சி செய்து, இரவில் 10 மணிக்கு தூங்கும் வாழ்க்கை முறை பழகியுள்ளார். திருமணமும், குழந்தைகளும் தேவை இல்லை என்று அவர் கூறுகிறார். “முக்கிய தேவைகளுக்கு மட்டும் பணம் செலவழிக்கிறேன்.
நகரத்தில் இருந்தபோது கனவில் கூட இந்த வாழ்க்கை தான் எனக்குள் இருந்தது,” என்று தெரிவித்துள்ளார். தனது குகையை ‘பிளாக் ஹோல்’ என அழைத்து, 40,000 பின்தொடர்பவர்களுக்கு தனது தினசரி வாழ்க்கையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.
அவரது வாழ்க்கை முறை இணையத்தில் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் பெற்றுள்ளது. சிலர் “இது சொர்க்க வாழ்க்கை” என்று குறிப்பிட்டுள்ளனர். அதேசமயம், “தனிமையை விரும்புபவர் நேரடி ஒளிபரப்புகள் ஏன் செய்கிறார்?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திருமண வாழ்க்கை, பணவழி சிக்கல்கள், மற்றும் தனிமையின் ஆசை ஆகியவற்றின் கலவையாக இந்த மின் ஹெங்காய் கதையை பலரும் எதிர்கொள்கின்றனர்.