![](https://www.seithisolai.com/wp-content/uploads/2023/02/y8.jpg)
டைலர் ரோஜர்ஸ் மற்றும் அலிசியா தம்பதி அமெரிக்காவில் வாஷிங்டன் நகரத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் தங்களது நண்பர்களான சீன் மற்றும் தயா ஹார்ட்லெஸ் தம்பதி மீது காதல் மலர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு இரவும் இரண்டு பெண்களும் தங்களது ஆண் நண்பரை மாற்றிக் கொள்வது வழக்கம். அலிசியா மற்றும் தயா இருவருக்கும் தலா ஒரு குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் இந்த குழந்தைகளுக்கு யார் தந்தை என இன்று வரை தெரியாது. மேலும் சமூக ஊடகங்களில் வீடியோக்கள் மற்றும் படங்களை பார்ப்பதன் மூலம் அந்த குழந்தைகள் தங்களுடைய வித்தியாசமான உறவை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர். இவர்களுக்கு instagram-ல் 30000 பின் தொடர்பானவர்களும் டிக் டாக்கில் 1 லட்சத்து 20 ஆயிரம் பின் தொடர்பாளர்களும் உள்ளனர். இந்த சமூக ஊடகங்களின் வாயிலாக தங்களின் உறவு பற்றி வெறுக்கத்தக்க கருத்துகளையும் விமர்சனங்களையும் அடிக்கடி சந்தித்து வருவதாக நால்வரும் கூறுகின்றனர்.
மேலும் சிலர் இவர்களை மோசமான பெற்றோர்கள் என குற்றம் சாட்டியும் வருகின்றனர். இது குறித்து அலிசியா கூறியதாவது “நாங்கள் எங்கள் குழந்தைகளிடம் எதையுமே மறைக்கவில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் காதல் செய்கிறோம். இது எங்களுடைய குழந்தைகளுக்கு முன்பே தெரியும். நான் அவர்களிடம் ஏற்கனவே “அம்மாவுக்கு ஒரு ஆண் காதலன் இருக்கிறார். அப்பாவுக்கு ஒரு பெண் காதலி இருக்கிறார்” எனவும் கூறியுள்ளேன். நாங்கள் ஒன்றாக வாழ போகிறோம். நாம் அனைவரும் ஒரு பெரிய குடும்பம். நீங்கள் எங்களை எப்படி பெற்றோர்களாக நடத்துகின்றீர்களோ அதே போல அவர்களையும் நடத்த வேண்டும் என்று கூறினேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.