
கடலூர் வெளிச் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் மதியழகன். இவரது வீட்டு சமையல் அறையில் கேஸ் சிலிண்டர் உள்ள பகுதியில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதையடுத்து சிலிண்டருக்கு கீழ் உள்ள சிறுதுவாரம் வழியே எட்டிப் பார்த்த பாம்பு ஒன்று படம் எடுத்ததை கண்டு பயத்தில் நடுங்கினார் மதியழகன்.
இது குறித்து தகவலறிந்த பாம்பு ஆர்வலர் செல்லா சம்பவ இடத்திற்கு சென்றார். அதன்பின் பாம்பை லாவகமாக பிடித்த செல்லா அதனை பாட்டிலில் அடைத்து காப்பு காட்டில் கொண்டு விட்டார். இவ்வாறு சிலிண்டருக்கு கீழ் இருந்து நல்லபாம்பு வெளியில் படமெடுத்து ஆடும் காட்சியானது இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
