சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பஜனை கோவில் தெருவில் சீனு ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரிங் பட்டதாரியான கார்த்திக் வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளார். மேலும் கார்த்திக் அடிக்கடி தனது தந்தையை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் தெரிகிறது.

நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த கார்த்திக் தனது தந்தையை அடித்து உதைத்தார். பின்னர் கோபமாக படுக்கை அறைக்கு சென்று திடீரென கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.