மக்களின் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கும் இடமாகத் திகழ வேண்டிய சட்டமன்றத்தை, கூச்சலிட்டு நேரத்தை வீணடிக்கும் இடமாக மாற்றக் கூடாது என்ற கருத்து அரசியல் அரங்கில் பரவலாக எழுந்துள்ளது.

மக்கள் மன்றத்தில் இதுபோன்று நடக்கும் அராஜகப்போக்குகள் எப்போதுமே கண்டிக்கத்தக்கவை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

சட்டமன்றத்தின் மாண்பையும் கண்ணியத்தையும் காப்பாற்றத் தவறுபவர்கள் எத்தகைய சூழலிலும் மக்கள் பிரதிதிகளாக இருக்கத் தகுதியற்றவர்கள் என்று கடுமையான கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“>

 

மேலும், பொதுமக்களின் வரிப்பணத்தாலும் மக்களின் வாக்குகளாலும் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சட்டமன்றத்தின் நேரத்தை ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.