ஆட்சியதிகாரத்தை இழந்த பின்னரும் திமுக முன்னாள் அமைச்சர்களின் அதிகார திமிர் அடங்கவில்லை என்றும், அரசு அதிகாரிகளைத் தொடர்ந்து தரக்குறைவாகவும் சிறுமைப்படுத்தியும் பேசி வருவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆகஸ்ட் 17 அன்று புறம்போக்கு நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், “எனக்குக் கீழே 108 ஐ.எப்.எஸ் அதிகாரிகள் இருந்தார்கள்” என்று ஆணவத்துடன் ஒருமையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நேற்று, ஏரி ஆக்கிரமிப்பு புகார்களுக்கு ஆளாகியுள்ள எ.வ.வேலு, அரசு அதிகாரிகளை “சலாம் போடுபவர்கள்” என்று அவமதிக்கும் வகையில் பொதுவெளியில் பேசி சிறுமைப்படுத்தியுள்ளார்.

அரசு அதிகாரிகள் எন্வொரு தனி நபரின் அடிமைகள் அல்ல என்பதும், அவர்கள் நாட்டின் சட்டத்திற்கு, அரசியலமைப்பிற்கும், பொதுமக்களுக்கும் மட்டுமே நேர்மையாகப் பணியாற்றக் கடமைப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“>

 

ஆட்சியில் இல்லாதபோதே அதிகாரிகளை இந்த அளவுக்குத் தரக்குறைவாகப் பேசும் மனநிலை கொண்டவர்கள், ஒருவேளை மீண்டும் அதிகாரம் கையில் கிடைத்தால் பொதுமக்களையும் அரசு இயந்திரத்தையும் எப்படி ஒடுக்குவார்கள் என்பதை நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.