சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது, சாலைப் பாதுகாப்பு மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் பெற்றோர் மீதான பொறுப்புணர்வு குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.
பிலாஸ்பூர் நகரில் வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளம் மாணவர் மீது, அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், இருசக்கர வாகன ஓட்டியான மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியவர் ஒரு சிறுவன் என்று அங்கிருந்த கண்ணில் கண்ட சாட்சிகள் மற்றும் மக்கள் குற்றம் சாட்டினர். அதுமட்டுமின்றி, அந்தச் சிறுவன் மதுபோதையில் காரை இயக்கியிருக்கலாம் என்றும் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த மதுபோதை குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தக் காவல்துறையினர் முறையான மருத்துவப் பரிசோதனைகளையும் ஃபோரென்சிக் ஆய்வுகளையும் உடனடியாகத் தொடங்கியுள்ளனர்.
बिलासपुर में कमाल कम मामला सामने आया है
पहले एक कार में बैठे कुछ युवाओं ने एक्सीडेंट किया और उसके बाद कार के अंदर एक कपल रोमांस करने लगा किस करने लगा… गुस्साए लोगो ने लड़के को निकाल कर खूब पिटा और लड़की को भी थप्पड़ जड़ा वीडियो सोशल मीडिया पर खूब वायरल@bsppolicecg #Bilaspur pic.twitter.com/nANddRyqrp— Labhesh Ghosh (Bhilai Times) (@labheshghosh) August 15, 2026
விபத்து நடந்த உடனான காட்சிகளை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட, அந்த வீடியோக்கள் காட்டுத் தீ போல பரவின. நொடியில் வைரலான அந்தப் பதிவுகள் நெட்டிசன்களை உலுக்கியெடுத்ததுடன், பொதுமக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தின.
அதாவது வைரலாகும் அந்த வீடியோவில் உள்ள தகவலின்படி முதலில், காரில் அமர்ந்திருந்த சில இளைஞர்கள் விபத்துக்குள்ளாகினர். அதன் பிறகு, காரின் உள்ளே இருந்த ஒரு தம்பதியினர் தகாத முறையில் நடந்துகொண்டு முத்தமிட்டுக் கொண்டனர்… இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அந்த இளைஞனை வெளியே இழுத்து கடுமையாகத் தாக்கினர்; மேலும் அந்தப் பெண்ணையும் அறைந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும், வாகனத்தின் பதிவு உரிமையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்குத் விரைந்த காவல்துறையினர், அப்பகுதியைப் பாதுகாப்பிற்குள் கொண்டுவந்து விபத்துக்குள்ளான வாகனத்தைக் கைப்பற்றினர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
