மறைந்த பிரபல கேங்ஸ்டர் அடிக் அகமதுவின் இளைய மகனான அபான் அகமது, உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரயாக்ராஜ் பகுதியில் இருந்து தனது சிறைவாசம் அனுபவித்து வரும் சகோதரர் அலி அகமதுவைச் சந்திப்பதற்காக வெள்ளை நிற கார் ஒன்றில் அவர் தனது நண்பர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்த போது இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பயணத்தின் போது ஜான்சி பூஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்றுகொண்டிருந்த அந்தத் அதிவேகக் கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் காரின் முன் பகுதி முழுவதுமாகச் சேதமடைந்ததோடு, அபான் அகமது மற்றும் உடன் பயணம் செய்த மேலும் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மற்ற மூவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக உமேஷ் பால் கொலை வழக்கில் சிறுவர்களாக இருந்ததால் நல்வாழ்வு மையத்தில் வைக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட அபான் அகமது, தற்போது விபத்தில் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.