தமிழகத்தில் கடந்த 23 ஆண்டுகளாக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான விற்பனையைத் தனியார் வசம் ஒப்படைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் பேசுபொருளாகியுள்ளன.

நேரடியாக மது விற்பனையில் ஈடுபடுவது அரசின் வேலையல்ல; மாறாக, முறையான கட்டுப்பாடுகளை விதித்து வரியாக வருவாயை ஈட்டுவதே சரியான நிர்வாக முறையாகும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் விரிவுபடுத்தப்பட்ட டாஸ்மாக் நிறுவனம், காலப்போக்கில் ஊழல், கூடுதல் விலை வசூல், சுகாதாரமற்ற பார்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் நிறைந்த ஒரு மாபெரும் நிழல் பொருளாதாரமாக மாறிவிட்டது.

தரமற்ற சேவை, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் மற்றும் சுகாதாரமற்ற சுற்றுப்புறம் போன்ற பல சமூகப் பிரச்சனைகளுக்குக் காரணமான இந்த அமைப்பை மாற்றுவது தற்போதைய காலத்தின் கட்டாயமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், முறையான விதிமுறைகளுடன் தனியார் உரிமங்கள் வழங்கப்படும்போது, சுத்தமான உணவகங்கள், தரமான பானங்கள் மற்றும் வெளிப்படையான விலை நிர்ணயம் ஆகியவை சாத்தியமாகும்.

அதேசமயம், அரசின் ஏகபோகம் என்ற நிலையிலிருந்து மாறி ஆளுங்கட்சிக்கு நெருக்கமான குறிப்பிட்ட சில தனியார் முதலாளிகளின் ஆதிக்கமாக இது மாறிவிடக் கூடாது என்பதில் நிர்வாகம் அதீத கவனம் செலுத்த வேண்டும்.

உரிமங்கள் வழங்குவதில் நூறு சதவீத வெளிப்படைத்தன்மை, குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகே கடைகள் அமைப்பதைத் தவிர்ப்பது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

“>

 

அரசின் நேரடி மது விற்பனை என்ற நீண்டகால முறைகேடான சிஸ்டத்தை ஒழித்துக்கட்டி, ஒரு தெளிவான, நெறிப்படுத்தப்பட்ட புதிய கொள்கையை முதலமைச்சர் விஜய் வெற்றிகரமாகச் செயல்படுத்துவார் என்றால், அது அவரது ஆட்சியின் மிகப்பெரிய வரலாற்றுச் சீர்திருத்தமாக அமையும்.