கல்வியின் ஆலயம் என்று போற்றப்படும் பள்ளிக்கூடம், இன்று ஒரு பயங்கரமான கறையால் கறைபடிந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் கஞ்ச்பசோதாவில் உள்ள பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி, இப்போது ஒரு இருண்ட ரகசியத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
உயிர் அறிவியலைப் போதிக்க வேண்டிய ஒரு ஆசிரியர், இளம்பருவத்துப் மாணவிகளின் கண்ணியத்தைச் சிதைக்கும் வகையில் நடந்துகொண்டார் என்ற அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு, பெற்றோர்களின் நெஞ்சைப் பிளந்திருக்கிறது.
வகுப்பறைக்குள் நுழைந்தால் பாடங்களைப் பயில வேண்டிய மாணவிகள், இன்று அச்சத்தில் உறைந்துபோய், தாங்கள் சந்தித்த அந்த வக்கிரமான அனுபவங்களை மழலை மாறாத குரலில் தங்களது பெற்றோரிடம் சொல்லும்போது, அவர்கள் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.
வகுப்பறையில் வரைபடம் வரைவதாகக் கூறி, ஆபாசமான ஓவியங்களை வரைவதும், மாணவிகளின் நோட்டுப் புத்தகத்தில் அட்டை இல்லை என்றால், “உன் உடையில் உள்ள துணிகளையும் இப்படித்தான் கழற்றிவிடுவேன்” என்று கொடூரமான அர்த்தத்தில் மிரட்டுவதும் ஒரு ஆசிரியரின் வேலையா? தற்காப்புக்காகப் பள்ளிக்கு அனுப்பப்படும் பிள்ளைகளுக்கு, அங்கேயே ஒரு அச்சுறுத்தல் காத்திருக்கிறது என்பதை அறிந்த பெற்றோர்கள், கதறித் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எட்டாம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமிகளின் குமுறல், “ஆசிரியர் பாடம் நடத்துவதை விட, எங்களை உடல் ரீதியாகத் தொட்டு அத்துமீறுகிறார்” என்று நீளும்போது, கல்வி சமூகம் தலைகுனிந்து நிற்கிறது. இது வெறும் ஒரு ஆசிரியர் மீதான புகார் அல்ல; எதிர்காலத்தின் அடையாளங்களாக வளர வேண்டிய குழந்தைகளின் மனதைச் சிதைக்கும் ஒரு பெரும் குற்றச் செயல்.
“Your clothes will also be removed, just like the notebook has no cover.”
A Biology teacher at KV in Ganjbasoda is accused of this sick remark and bad touch with female students. Parents recorded statements before SDM. Teacher calls it “vindictive.”#MadhyaPradesh #POCSO pic.twitter.com/ww5nQvsF4n
— Its Viral (@ooky2v) July 15, 2026
“>
எஸ்.டி.எம் அனுபவ ஜெயின் தலைமையிலான விசாரணை தொடங்கியிருந்தாலும், “இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய், பழிவாங்கும் நோக்கம் கொண்டவை” என்று அந்த ஆசிரியர் அலட்சியமாகக் கூறும் அந்த வார்த்தைகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் காயத்தின் மீது வைக்கும் நெருப்பு. கல்வி எனும் பெயரில் நடக்கும் இந்தத் துரோகத்திற்குத் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பெற்றோரின் ஒரே கண்ணீர் வேண்டுகோள்.
