இ-ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் பெண் பயணிகளிடம் காட்டிய அன்பும், அக்கறையும் சமூக வலைதளங்களில் பலரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணை அன்புடன் அழைத்து, “மகளே… பாதுகாப்பாக அமருங்கள்” என்று அவர் அழைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

முதலில் தயங்கிய அந்தப் பெண், பின்னர் அவர் மீது நம்பிக்கை வைத்து ரிக்‌ஷாவில் ஏறுகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக மாணவிகளுக்கு இலவசமாகப் பயணம் அளித்து வருவதாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தனது பொறுப்பு என்றும் அவர் அந்தப் பெண்ணிடம் அமைதியாகக் கூறுகிறார்.

இந்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு, அந்த ஓட்டுநரின் மனிதாபிமானத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்திருக்கும் சூழலில், இவரைப் போன்றவர்களின் செயல் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

“>

 

எந்தவித எதிர்பார்ப்புமின்றி மற்றவர்களுக்கு உதவும் இத்தகைய மனிதநேயச் செயல்கள், சமூகத்தில் இன்னும் மனிதாபிமானம் அழியவில்லை என்பதை உணர்த்துகின்றன. இந்த எளிய இ-ரிக்‌ஷா ஓட்டுநரின் செயல், மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்தால் பொது இடங்கள் பெண்களுக்கு மேலும் பாதுகாப்பானதாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.