தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறையில் கொண்டு வரப்பட்ட 5 முக்கிய டெண்டர்களை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த திடீர் நடவடிக்கை அரசியல் வட்டாரத்திலும், அரசு நிர்வாகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்துக் கழகத்தை மேம்படுத்துவதற்காக முந்தைய திமுக ஆட்சியில் பல்வேறு ஒப்பந்தப் புள்ளிகள் (Tenders) கோரப்பட்டிருந்தன. அவற்றில் தற்போதைய தவெக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் இதோ:
டயர்கள் வாங்கும் ஒப்பந்தம்: அரசுப் பேருந்துகளுக்காக 60 ஆயிரம் புதிய டயர்கள் வாங்குவதற்காகப் போடப்பட்டிருந்த மெகா டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மினி பஸ் அடிச்சட்டம்: மினி பேருந்துகளுக்கான அடிச்சட்டங்களை (Chassis) கொள்முதல் செய்யவிருந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பிடம் அறியும் கருவி: பேருந்துகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் மற்றும் கண்காணிக்கும் ஜிபிஎஸ் கருவிகளை வாங்குவதற்கான டெண்டரும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதிய பேருந்து கூடு: மினி பேருந்துகளுக்குப் புதிய கூடுகள் (Bus Body Building) கட்டுவதற்காகக் கோரப்பட்டிருந்த ஒப்பந்தம்.
இவற்றுடன் சேர்த்து போக்குவரத்துத் துறையின் கீழ் வரவிருந்த மொத்தம் 5 முக்கிய டெண்டர்களை தவெக அரசு தற்பொழுது முழுமையாக ரத்து செய்து முத்திரை குத்தியுள்ளது.
முந்தைய அரசின் திட்டங்களில் மறுபரிசீலனை அல்லது புதிய வெளிப்படையான டெண்டர் முறையைக் கொண்டு வரும் நோக்கிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
