டெல்லியில் உள்ள மருத்துவமனையில் 35 வயதான மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர் டாக்டர் சிமர்பிரீத் சிங் ஆனந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஜூலை 4ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜூலை 5ஆம் தேதி காலை 8 மணி வரை மருத்துவமனையில் இரவு நேரப் பணியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அவர் பணிபுரிந்த கடமை அறையிலேயே உயிரற்ற நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மருத்துவர் உயிரிழந்த அந்த அறையிலிருந்து மூன்று பக்கங்கள் கொண்ட தற்கொலைக் கடிதம் மற்றும் அவரது தனிப்பட்ட டைரி ஆகியவற்றை மீட்டெடுத்துள்ளனர்.
இந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது குறித்தும், அவரது இந்த தீவிர முடிவிற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
