மறைந்த ‘திரைக்கதை திலகம்’ கே. பாக்கியராஜின் இறுதிச் சடங்கில், நடிகை ராதிகா சரத்குமார் ஊடகத்தினரைப் பார்த்து கைகூப்பி உணர்ச்சிவசப்பட்டு விடுத்த கோரிக்கை தற்பொழுது சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
திரையுலகமே கண்ணீரில் மிதக்கும் சூழலில், பாக்கியராஜின் உடலை ஆம்புலன்ஸில் இருந்து வீட்டிற்குள் கொண்டு வர முடியாதபடி கேமராக்களும், கூட்டமும் மொய்த்துள்ளன.
இதனால் ஆம்புலன்ஸில் இருந்து இறங்கிய நடிகை ராதிகா, பாக்கியராஜின் குடும்பத்தினருக்கு வழிவிடுமாறு கைகூப்பி அழுதுகொண்டே, “தயவுசெய்து டிஆர்பி-க்காக இப்படித் துரத்தாதீங்க.
<a href="http://
கையெடுத்து கும்பிடறன், TRP வேணாம்னு சினிமால நடிச்சி தரோம் , கொஞ்சம் பிரைவேசி கொடுங்க #Bhagyaraj #Radhika pic.twitter.com/PdbuKivcW1
— Behind Talkies (@BehindTalkies) June 27, 2026
“>
நாங்க உங்களை சினிமா மூலமா என்டர்டெயின் தான் பண்றோம், இந்த இக்கட்டான நேரத்துல அந்த குடும்பத்த மதிச்சு கொஞ்சம் வழி விடுங்க” என்று மீடியாவிடம் ஆக்ரோஷமாகவும் எமோஷனலாகவும் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.
