“பசி தாங்க முடியாம ஆன்லைன்ல பிரியாணி ஆர்டர் பண்ணிட்டு வாசலையே பார்த்துட்டு இருந்தேன் சார், ஆனா அந்த ஜொமாட்டோ டெலிவரி பாய் கேட் முன்னாடி ஒரு போலி போட்டோவை எடுத்து ஆப்ல அப்லோட் பண்ணிட்டு, நான் ஆசையா ஆர்டர் பண்ண சாப்பாட்டுப் பையை  திருடிக்கிட்டு ஓடிட்டார் !”

என்று கொல்கத்தாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் ஒருவர் தனது வீட்டு சிசிடிவி (CCTV) காட்சிகளுடன் காவல் நிலையத்திலும் ஜொமாட்டோ நிறுவனத்திலும்  புகார் அளித்திருப்பது ஆன்லைன் உணவு பிரியர்களிடையே மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் அரங்கேறியுள்ள இந்த விசித்திரத் திருட்டு சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஜொமாட்டோ ஊழியர் உணவை வாடிக்கையாளரிடம் ஒப்படைக்காமலேயே மொபைல் செயலியில் ‘டெலிவரி செய்யப்பட்டது’ (Delivered) என மாற்றிவிட்டு, சாப்பாட்டுப் பையுடன் நைசாக நழுவிச் செல்லும் பகீர் காட்சிகள் வீட்டு வாசலில் இருந்த சிசிடிவி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

“>

இந்த அசைக்க முடியாத டிஜிட்டல் ஆதாரங்களை நிறுவனத்திற்கு அனுப்பி முழுப் பணத்தையும் ரீஃபண்ட் (Refund) செய்யக் கோரியுள்ள வாடிக்கையாளர், அந்தப் போலி ஊழியர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸாரை முடுக்கிவிட்டுள்ளதால் டெலிவரி வட்டாரமே தற்பொழுது கதிகலங்கிப் போயுள்ளது.