குவாத்தமாலா சிட்டியில் உள்ள லா அரோரா உயிரியல் பூங்காவில், தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்த மான் ஒன்றை யானை ஒன்று தனது தும்பிக்கையால் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்த பார்வையாளர்கள், யானையின் இந்த சமயோசித புத்தியையும், உதவி செய்யும் குணத்தையும் கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.

“>

ஏற்கனவே இதே பூங்காவில், ‘ட்ரோம்பிதா’ என்ற 61 வயதுடைய ஆசிய யானை, ஆபத்தில் இருந்த மற்றொரு விலங்கைக் காப்பாற்ற கவனிப்பாளரை அழைத்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. யானைகளின் இந்த நுண்ணறிவும், பிற உயிரினங்களிடம் காட்டும் கருணையும் பார்வையாளர்களையும், அதிகாரிகளையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.