லூதியானாவின் மாடல் டவுன் எக்ஸ்டென்ஷன் பகுதியில், காய்கறி வாங்கச் சென்ற பெண்ணிடம் துப்பாக்கி முனையில் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 5-ஆம் தேதி மாலை, ரீமா சாவ்லா என்ற பெண் வீட்டின் அருகே காய்கறி வாங்கிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர்.

கொள்ளையர்கள் அந்தப் பெண்ணை கத்தியால் மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர். அந்தப் பெண் அவர்களை எதிர்க்க முயன்றும் பலனளிக்கவில்லை.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தப் பகுதியில் இது போன்ற வழிப்பறிச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், குறிப்பாகப் பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

“>

 

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.