உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு தையல் கடையில் (Tailor Shop), துணிகளை அயர்ன் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டரில் தீப் பிடித்தது. சில வினாடிகளிலேயே தீ மளமளவென எரியத் தொடங்கியதால் கடையில் இருந்த ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், பதற்றமடையாமல் அங்கிருந்த ஊழியர்கள் செய்த ஒரு துணிச்சலான காரியம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. சிலிண்டர் வெடித்துக் கடை முழுவதும் தீ பரவுவதற்கு முன்பே, எரியும் சிலிண்டரை லாவகமாகத் தூக்கி கடையிலிருந்து வெளியே வீசினர்.
आगरा में टेलर की दुकान में गैस सिलेंडर में लगी आग…. बाल-बाल बची कर्मचारियों की जान..प्रेस करते समय अचानक भड़की आग…CCTV में कैद हुई घटना…लोगों ने सूझबूझ से पाया काबू@agrapolice @Uppolice #HADSA #BREAKINGNEWS pic.twitter.com/Mgv8qprCX2
— Journalist Deepika singh (@Deepikasingh043) April 28, 2026
வெளியே வீசப்பட்ட சிலிண்டரில் தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு தண்ணீர் மற்றும் மணலைப் போட்டுத் தீயை அணைத்தனர். ஊழியர்களின் இந்த அதிரடி முடிவால் ஒரு பெரிய உயிர்ச் சேதமும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் காப்பாற்றப்பட்டன. இந்தச் சிலிர்க்க வைக்கும் காட்சிகள் அனைத்தும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “நேரத்திற்குச் சரியான முடிவு எடுத்து விபத்தைத் தடுத்த ஊழியர்களின் சாதுர்யம் பாராட்டுக்குரியது” என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
