ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான போட்டியில், விராட் கோலியின் சாதுர்யமான திட்டத்தினால் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி ஆர்சிபி பந்துவீச்சாளர்களைத் திணறடித்தது. அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் சதம் விளாச, மறுபுறம் ஷுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது. ஒரு கட்டத்தில் குஜராத் அணி 250 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
🤝 VIRAT KOHLI & SHUBMAN GILL MOMENT 💫
Virat Kohli sharing a special moment with Shubman Gill at M Chinnaswamy Stadium.
Experience meets the future—pure class and mutual respect on display! 🏏✨ pic.twitter.com/LlToTTaspx
— Faruk🐦 (@uf2151593) April 24, 2026
விக்கெட்டை எடுக்க முடியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் திணறியபோது, விராட் கோலி தனது அனுபவத்தைப் பயன்படுத்தி ஒரு திட்டத்தைத் தீட்டினார். ஓவர்களுக்கு இடையே பந்துவீச்சாளர்களைத் தொடர்ந்து மாற்றியதோடு, ஷுப்மன் கில்லின் கவனத்தைச் சிதறடிக்கவும் முயன்றார்.
கில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, அவரிடம் சென்று சில வார்த்தைகளைப் பேசி சீண்டினார். “ஏன் பெரிய ஷாட்டுகளை அடிக்க முயற்சி செய்யவில்லை?” என்பது போன்ற வார்த்தைகளால் கில்லின் கவனத்தைத் திசைதிருப்பினார். கோலியின் இந்த ‘மைண்ட் கேம்’ அடுத்த ஓவரிலேயே பலன் அளித்தது.
அழுத்தத்திற்கு உள்ளான ஷுப்மன் கில், தேவையில்லாத ஷாட் ஆடி 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சாய் சுதர்சனும் விக்கெட்டைப் பறிகொடுத்தார். 250 ரன்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விக்கெட் வீழ்ச்சியால் குஜராத் அணி 205 ரன்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது. கோலியின் இந்தச் சிறு யுக்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றி ஆர்சிபியின் வெற்றியை எளிதாக்கியது.
