​தளபதி விஜயைக் காண்பதற்காக பெங்களூரிலிருந்து ஒரு தீவிர ரசிகர் ₹1,88,000 மதிப்பிலான விலையுயர்ந்த பரிசுப் பொருட்களுடன் சென்னை வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்காக பிரத்யேகமாக வெள்ளியில் செய்யப்பட்ட கிரீடம் மற்றும் வெள்ளிப் பாதுகைகளை (காலணி) அவர் கொண்டு வந்துள்ளார். ஒரு கிலோவிற்கும் அதிகமான எடையில் மின்னும் இந்தப் பரிசுகளைக் கண்ட அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.

​சமூக வலைதளங்களில் இந்த ரசிகரின் பேட்டி மற்றும் அவர் கொண்டு வந்த வெள்ளிப் பொருட்கள் குறித்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “இதன் மதிப்பு என்ன?” என்று கேட்டதற்கு, தயக்கமின்றி ₹1,88,000 என்று அந்த ரசிகர் கூறியது அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. தலைவருக்காக எதையும் செய்யத் துணியும் ரசிகர்களின் அன்பு, அரசியல் களத்திலும் விஜய்க்குப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.