நண்பர்களுக்குள் விளையாடிய ஒரு சாதாரண விளையாட்டு, இன்று ஒரு மிகப்பெரிய விபரீதத்தில் முடிந்துள்ளது. இரண்டு நண்பர்கள் ஜாலியாக ‘குதிரை சவாரி’ (Caballito) விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகச் சமநிலை தவறி 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்தனர். சுமார் 30 அடி உயரத்திலிருந்து விழுந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினாலும், அவர்களுக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
🚨 INDIA 🇮🇳‼️ | Dos amigos estaban jugando al “Caballito” cuando cayeron desde un tercer piso. No fallecieron pero quedaron heridos y fueron trasladados al hospital.
pic.twitter.com/q315nffle0— XAlertNow (@xalertnow) March 6, 2026
கீழே விழுந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாடி போன்ற உயரமான இடங்களில் விளையாடும்போது ஒரு சின்ன கவனக்குறைவு கூட எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. நண்பர்களின் இந்த நிலை குறித்து அவர்களது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
