அன்பு என்பது வெறும் பகட்டு அல்ல, அது ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் அர்ப்பணிப்பு என்பதை இந்த வைரல் வீடியோ உணர்த்துகிறது. ஒரு ரயில் நிலையத்தில், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தபோதிலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு வயதான பெண்மணி தனது கணவரின் கால்களைப் பிடித்து மசாஜ் செய்து விடுகிறார். சுற்றியிருப்பவர்கள் தங்களைப் பார்ப்பதைப் பற்றியோ அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதோ அந்தப் பாட்டிக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் தன் கணவரின் வலியும், அவர் மீதான அக்கறையும் மட்டுமே.
कौन दुनिया कौन चार लोग इतना आदर और प्यार ये अंतिम पीढ़ी है हमारी जो विलुप्त होने की कगार पर है
प्रेम कभी दौलत या दिखावे से नहीं मापा जाता, बल्कि हर सुख-दुःख में एक-दूसरे के प्रति श्रद्धा, करुणा और धर्मपरायण भाव से निभाए जाने से झलकता है। pic.twitter.com/V9PX2tprde— SHANKAR LAL SHARMA (@sk_sharma21) January 16, 2026
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தக் காட்சி, இன்றைய தலைமுறையினரிடையே அரிதாகி வரும் நிசப்தமான, தூய்மையான காதலைப் பிரதிபலிக்கிறது. “யார் என்ன சொன்னால் என்ன, இதுதான் எங்களின் உலகம்” என்ற ரீதியில் அமைந்த இந்த வீடியோவைப் பார்த்த பலரும், உண்மையான காதல் என்பது செல்வத்திலோ அல்லது ஆடம்பரத்திலோ இல்லை, ஒருவருக்கொருவர் காட்டும் மரியாதையிலும் அர்ப்பணிப்பிலும்தான் இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
