கிழக்கு டெல்லியின் லக்ஷ்மி நகர் பகுதியில் உடற்பயிற்சிக் கூட உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி இரண்டாம் தேதி குடியிருப்பு பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
In #Delhi‘s Laxmi Nagar area, goons stripped a man, dragged him on the street, and assaulted him. The victim had a gym in the accused’s home, which sparked a dispute. pic.twitter.com/YP9CEWnA56
— Siraj Noorani (@sirajnoorani) January 5, 2026
தரைதளத்தில் ஏற்பட்ட நீர் கசிவைச் சரிபார்க்கச் சென்ற உரிமையாளர் ராஜேஷ் கார்க்கையும் அவரது மனைவியையும் அங்கிருந்த காப்பாளர் மற்றும் அவரது கூட்டாளிகள் கடுமையாகத் தாக்கினர். அப்போது தடுக்க வந்த உரிமையாளரின் மகனைத் தெருவில் இழுத்துச் சென்று ஆடைகளைக் களைந்து அநாகரிகமான முறையில் தாக்கியதுடன், அவரது மனைவியிடமும் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அருகில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், காவல்துறையினர் முதன்மை குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள், தேசியத் தலைநகரில் இத்தகைய துணிகரமான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
