KVN Productions தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்த அப்டேட்டுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில், “புயலுக்கு முன் அமைதி (Calm before the storm) முடிவடைகிறது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதிவின் மூலம், இன்று முதல் ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த புதிய செய்திகள் மற்றும் அப்டேட்டுகள் ரசிகர்களுக்குத் தொடர்ந்து கிடைக்கவிருக்கும் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், “இன்று முதல் வெறித்தனமா Vibe ஆவலாமா” என்ற கேள்வியுடன் இந்தப் பதிவு முடிந்துள்ளது. KVN Productions-ன் இந்த உற்சாகமான அறிவிப்பு, ‘ஜனநாயகன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து, சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது.