உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனில் உள்ள பாங்கே பிஹாரி கோவில் தெருக்களில் 7.2 அடி உயரமான ஒருவர் நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கிருஷ்ணரின் பிருந்தாவனத்தில் இவ்வளவு உயரமான ஒரு மனிதரை மக்கள் பார்த்தபோது, அது அவர்களுக்கு ஒரு அதிசயமாகவே இருந்தது.
பிருந்தாவன் கோவிலின் தெருக்களில் பக்தர்கள் தங்கள் வேலைகளில் இருக்கும்போது, இந்த மிக உயரமான நபர் வந்ததைக் கண்டதும், அனைவரின் பார்வையும் அவர் மீதே விழுந்தது.
View this post on Instagram
சிலர் ஆச்சரியத்தில் நின்று பார்க்க, வேறு சிலர் தங்கள் மொபைலில் அவரை வீடியோ எடுக்கத் தொடங்கினர். இந்த நபரின் உயரத்தைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், “இவர் ஒரு மினாரைப் போல உள்ளார்” என்று கிண்டலாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், “இவ்வளவு உயரமாக இருப்பதால், இவர் தான் கோவிலில் முதலில் தரிசனம் செய்திருப்பார்” என்றும் வேடிக்கையாகக் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
