இந்தச் சம்பவம் சீனாவில் உள்ள ஹாங்சோ சஃபாரி பூங்காவில் நடந்தது. அங்கு குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியின்போது, ஒரு கருப்புக் கரடி திடீரென தன்னுடையப் பராமரிப்பாளரைத் தாக்கியதால் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. கரடி, கூட்டத்தின் முன் அதன் திட்டமிட்ட நிகழ்ச்சியை முடித்த உடனேயே இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது.
இந்தத் தாக்குதல் குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, மக்கள் அதிர்ச்சியடைந்ததும், அரங்கிற்குள் கரடி அதன் பராமரிப்பாளரைத் தாக்கியதால் ஏற்பட்டப் பதட்டமும் பதிவாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டக் காணொளியின்படி, இரண்டு பராமரிப்பாளர்கள் அடுத்த நிகழ்ச்சிக்காக இரண்டு கருப்புக் கரடிகளை மேடைக்கு அழைத்து வந்தனர்.
Black bear crashed out on employees after they put him in a circus show at the Hangzhou Safari Park. The bear has been removed from doing shows. 😳😭🐻 pic.twitter.com/PrUFbmTozO
— Rain Drops Media (@Raindropsmedia1) December 8, 2025
“>
ஒரு கரடி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அறிவுறுத்தல்களைப் பின்பற்றியது. ஆனால், இரண்டாவது கரடி திடீரெனப் பாய்ந்து, அதன் பராமரிப்பாளரைத் தரையில் தள்ளியது. இந்தத் தாக்குதல் சுமார் 46 வினாடிகள் நீடித்தது. அப்போது ஊழியர்கள் உதவிக்கு விரைந்தபோது பார்வையாளர்கள் அலறும் சத்தம் கேட்டது.
