சமூக ஊடகங்கள், அதன் பயனர்களுக்குத் தினமும் ஆச்சரியமூட்டும் விஷயங்களைக் காட்டி வருகிறது. இந்த வரிசையில் தற்போது ஒரு தொழிலாளர் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஒரு கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, அதிக எண்ணிக்கையிலான செங்கற்களை மாடிக்கு எடுத்துச் செல்ல வேண்டி இருந்ததால், புத்திசாலித்தனமாகச் செயல்பட்டுள்ளார்.

வழக்கம்போல் அடிக்கடி படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டிய வேலையைக் குறைக்க, அவர் ஒரு நீண்ட கயிறைத் தரையில் விரித்து, அதில் பல டஜன் செங்கற்களை வரிசையாக அடுக்கி வைத்துள்ளார். பின்னர், அந்தக் கயிறை மேலே கட்டி, அந்த அனைத்து செங்கற்களையும் தனது முதுகில் ஒரு துணியைப் போட்டபடி ஒரே நேரத்தில் தூக்கிக் கொண்டு மாடிக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by @aapkaculture

ஒரே நேரத்தில் இவ்வளவு அதிக எடையுள்ள செங்கற்களை அந்தத் தொழிலாளி எளிதாகத் தூக்கிச் சென்ற அபார சக்தி மற்றும் சாமர்த்தியம் காரணமாக, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவை ‘@aapkaculture’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உட்படப் பல கணக்குகளில் பகிரப்பட்டு வருகிறது.

வீடியோவின் மேல், ‘இவனுக்கு ஈடு இணை யாரும் இல்லை’ என்று இந்தியில் எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோவைக் கண்ட இணையப் பயனர்கள், அந்தத் தொழிலாளியை ‘உண்மையான பாகுபலி’ என்று பாராட்டியுள்ளனர். அந்தத் தொழிலாளியின் உடல் வலிமை மற்றும் நேரத்தைச் சேமிக்க அவர் பயன்படுத்திய தந்திரம் ஆகியவை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.