இலங்கையில் தனியாகப் பயணம் செய்த நியூசிலாந்தைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவரிடம், உள்ளூர் நபர் ஒருவர் ஆபாசமாக நடந்துகொண்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. துணைக் கண்டங்களுக்குப் பயணம் செய்து கொண்டிருந்த அந்தப் பெண், தனது ஆட்டோ பயணத்தின் நான்காவது நாளில் இந்தச் சமூக விரோத அனுபவத்தைச் சந்தித்துள்ளார்.
Only LTTE can fix Sri Lanka
pic.twitter.com/DPTXiogn1R— Shark (@fintech_shark) November 16, 2025
ஒரு ஸ்கூட்டரில் வந்த நபர், அப்பெண்ணைத் தொடர்ந்து பின்தொடர்ந்துள்ளார். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தெரிந்த அவர், ஒரு கட்டத்தில் பேச்சுக் கொடுப்பதுபோல் அருகில் வந்து, திடீரென ஆபாசமாக நடந்துகொண்டதோடு, பாலியல் ரீதியான கோரிக்கையையும் விடுத்துள்ளார். இந்தப் பயங்கரமான சம்பவத்தைக் குறித்த வீடியோவை அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், அது அதிவேகமாகப் பரவியது.
அந்தப் பெண்ணின் பதிவில், அந்த நபர் சிறிது நேரம் பின்தொடர்வதை நிறுத்தியிருந்தாலும், தண்ணீர் குடிக்க அவர் நின்றபோது மீண்டும் வந்துள்ளார். அந்த நபர் முதலில் சகஜமாகப் பேச முயற்சி செய்துவிட்டு, பின்னர் தங்கியிருக்கும் இடம் குறித்துக் கேட்டு, பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அப்பெண் தெரிவித்துள்ளார். இந்தச் சமூக விரோதச் செயலுக்குப் பிறகு, அந்தப் பெண் உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றாலும், தனது முழுப் பயணமும் பயத்துடனும், மன அழுத்தத்துடனும் கழிந்ததாகக் கூறியுள்ளார்.
எனினும், அந்தப் பெண், இந்தச் சம்பவம் இலங்கையின் முழு பிம்பத்தையும் வரையறுக்காது என்றும், தனக்கு உதவிய, அன்பான மக்கள் அங்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வீடியோ வெளியானதை அடுத்து, இலங்கை காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு, 23 வயதுடைய அந்த குற்றவாளியைக் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
