உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷெஹர் மாவட்டத்தில் திருமண விழாவில் ரொட்டி தயாரிக்கும் போது அதன் மீது எச்சில் துப்பிய சம்பவத்தில் ஈடுபட்ட டேனிஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வீடியோவில் அவர் ரொட்டிகளைத் தயாரிக்கும் போது எச்சில் துப்புவது பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் அவரை அடையாளம் கண்டு ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மூத்த போலீஸ் அதிகாரி தேஜ்வீர் சிங், திருமண விழாவில் ரொட்டிகளின் மீது எச்சில் துப்பியதற்காக டேனிஷ் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அவர் வீடியோ அறிக்கையில் தெரிவித்தார்.
Another case of “Thook Jihad” has come to light in Bulandshahr, UP, where a person making rotis at a Dalit wedding ceremony is seen spitting on the roti. The police have arrested the person.
The accused’s name is Danish. pic.twitter.com/5PMnpOvpK1
— Megh Updates 🚨™ (@MeghUpdates) November 4, 2025
உத்தரப் பிரதேசத்தில் ரொட்டிகளின் மீது எச்சில் துப்பும் சம்பவங்களில் கைது நடவடிக்கை எடுக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஆகஸ்ட் மாதத்தில் பாக்பத் மாவட்டத்தில் சாலையோர உணவகத்தில் ரொட்டி தயாரிக்கும் போது எச்சில் துப்பிய நபர் ஒருவர் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். அதேபோல், மே மாதத்தில் மீரட் மாவட்டத்தில் ரொட்டி தயாரிக்கும் போது எச்சில் துப்பிய மற்றொரு நபரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
