தமிழ் சினிமாவில் எந்தவித பின்புலமுமின்றி தன் முயற்சியாலும், தொழில்முறை மனப்பான்மையாலும் வெற்றிக்குக் கருவாக விளங்கியவர் நடிகர் அஜித் குமார்.

தொடக்கத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும், பின்னர் வெற்றிப் படைவீடு கட்டிய அஜித், இன்று தனக்கென வலிமையான ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ளவர். எந்தவித அரசியலோ, ரசிகர் மன்றங்களோ இல்லாமலேயே பெரும் பின்பற்றலுடன் மாஸ் ஹீரோவாக உயர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)

“>

இந்நிலையில், தற்போது அவரது புதிய படம் ‘ஏகே 64’ ஷூட்டிங் தொடங்கவிருக்கும் நிலையில், நடிகர் அஜித் தன் மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார்.

பாலக்காடைச் சேர்ந்தவரான அவரது தந்தையின் வழியில் இந்த அம்மன் கோவில் அவர்களின் குலதெய்வமாக கருதப்படுகிறது. அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, அவரது நெஞ்சில் பச்சை குத்தியிருந்த பகவதி அம்மனின் உருவம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது அவருடைய இறையருக்கான நம்பிக்கையையும், ஆன்மீக பற்றையும் வெளிப்படுத்துகிறது. தன்னுடைய வெற்றிக்குப் பின்னாலும், தாய் தெய்வத்தை நம்பும் அஜித்தின் இந்த செயல், ரசிகர்களிடம் மேலும் விருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது