ரயில்வே தண்டவாளத்தில் ஒரு முதியவர் அமர்ந்திருக்கும் காட்சி தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், அந்த முதியவர் தண்டவாளத்தில் அமர்ந்திருக்க, திடீரென வேகமாக வரும் ரயில் ஒன்று அவரை நோக்கி நெருங்குகிறது.
ரயில் மிக அருகில் வந்தபோது, அந்த முதியவர் உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு எழுந்து, விரைவாகப் பிளாட்பாரத்தின் மீது ஏறிக் கடைசிக் கணத்தில் உயிர் தப்பினார். இந்த நிகழ்வு சில வினாடிகளுக்குள் நடந்து முடிந்தது, ஆனால் காண்பதற்கு மிகவும் பயங்கரமாக இருந்தது. ஒரு வினாடி தாமதித்திருந்தாலும் அவரது உயிர் போயிருக்கும்.
लगता हैं चाचा का यमराज के साथ उतना बैठना है। pic.twitter.com/tSca6gYr5m
— Anand Yadav (@Anand_thunder) October 21, 2025
பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் இதைப் பார்த்த போதும், அதிர்ச்சியில் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. மாறாக, சிலர் உடனடியாகத் தங்கள் அலைபேசிகளை எடுத்து இந்தச் சம்பவத்தை வீடியோ பதிவு செய்தனர். இந்த காமெடி வைரலான நடுவில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
