பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது வர்ணனையாளராக உள்ள சனா மிர், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற இலங்கை – பாகிஸ்தான் போட்டியில், நடாலியா பெர்வைஸ் பேட்டிங் செய்ய வந்தபோது, அவர் “ஆசாத் காஷ்மீர்” பகுதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார். பின்னர் உடனே தன்னைத் திருத்திக் கொண்டாலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.

“>

 

இந்த குறிப்பை, இந்தியா “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்” என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடும் நிலையில், சனா மிர் செய்த கூற்று அரசியல் ரீதியாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

“>

 

கிரிக்கெட் வீரராக இருந்து வர்ணனையாளராக மாறிய அவரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவியதால், பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது இந்தச் சம்பவம் பாகிஸ்தான் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.