சமூக ஊடகங்களில் வனவிலங்குகள் தொடர்பான காணொளிகள் பெரும்பாலும் வைரலாகி வருகின்றன. தற்போது, அதில் ஒன்று பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இதில், சிங்கம் ஒரு குட்டி வரிக்குதிரையை இரையாக்க முயற்சிக்க, அதன் தாய் அதிரடி தந்திரத்துடன் அதைப் பாதுகாப்பது காணப்படுகிறது.

காணொளியில், இரு பெண் சிங்கங்கள் காத்திருக்கும் தருணத்தில், அதில் ஒன்று திடீரென எழுந்து, வரிக்குதிரைகள் கூடியிருந்த கூட்டத்தைக் குறி வைத்து ஓடுகிறது. இதனை உணர்ந்த அனைத்து வரிக்குதிரைகளும் ஓடத் துவங்குகின்றன. ஆனால், பெண் சிங்கம் தனது இரையாக்க இலகுவான இலக்காக ஒரு குட்டி வரிக்குதிரையை தேர்வு செய்கிறது.

அந்த தருணத்திலேயே, தாயாகிய வரிக்குதிரை தனது குட்டியை காப்பாற்ற திடமான முடிவெடுத்து, சிங்கத்தின் முன்பாகவும் பக்கவாட்டிலும் ஓடி, தனது குட்டியைச் சிங்கத்திடமிருந்து விலக்க முயற்சிக்கிறாள். அவரது அதிரடித் தந்திரமும், குட்டியின் வேகமும் சேர்ந்து, சிங்கத்தின் வேட்டையை தோல்வியடையச் செய்கின்றன.

 

இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை 86,000க்கும் மேற்பட்ட பேர் பார்த்துள்ளனர். ஏராளமானோர் இதற்கு தனது பாராட்டுக்களையும் நகைச்சுவையான கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர்.

மேலும் ஒரு பயனர், “இந்த வரிக்குதிரை இன்னும் நீண்ட நாட்கள் வாழப்போகிறது போலிருக்கிறது. அதிர்ஷ்டம் அதைக் காப்பாற்றியது!” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “சிங்கத்தின் காலை உணவுக்கே குறைபாடு, முழு நாள் பாழாகிவிட்டது!” என நகைச்சுவையாக எழுதியுள்ளார். மேலும் பலர், தாயான வரிக்குதிரையின் தைரியத்தை பாராட்டியுள்ளனர்.