திண்டுக்கல்லில் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட ஒரு வீடியோ, சாலையில் உள்ள ஒரு சாதாரணம் போன்ற வழக்கமான காட்சி ஒரே நொடியில் உயிர் இழப்பும்கூடிய ஒரு அவசர நிலையாக மாறுவதைக் காட்டுகிறது.

பெட்ரோல் நிலையம் அருகே, ஒரு இளைஞர் பைக்கில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு, அதன் பக்கவாட்டில் உள்ள பாதையை விரைவில் கடக்க  நகர்கிறார். அவர் பாதையை பார்த்ததும் சாலையை கடக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் அந்த வேளையில் முன்னிலிருந்த பாதையை கவனிக்காமல், எதிரே ஒரு பேருந்து வேகமாகவந்தது. இதை பார்த்ததும் பைக் ஓட்டுநர் பைக்கை திருப்ப முயன்றார்; ஆனால் பேருந்து நேரடியாக மோதியது.

 

 

இந்த பயங்கர விபத்தில் பைக் பெரும் அளவு சேதமடைந்த நிலையில் ஓட்டுநர் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினார். மேலும் இந்த விபத்துக்கு பிறகு அங்கிருந்தவர்கள் ஓடோடி சென்று அந்த பைக் ஓட்டுனருக்கு உதவி செய்த பின்னர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..