சகோதரரின் பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் ரக்ஷாபந்தன் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ரக்ஷா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பெண்கள் தாங்கள் சகோதரராக கருதும் ஆண்களுக்கு ராகி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.

 

நாடு முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வந்த நிலையில் பிரதமர் மோடி பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடியுள்ளார். குழந்தைகள் பிரதமர் மோடிக்கு ரக்ஷா ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.