
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற சிபிஐ எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்றனர்.
கம்யூனிஸ்ட், தொமுச, காங்கிரஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வரும் நிலையில் திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.