திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பாமக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுவெளியில் டாக்டர். ராமதாஸ் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது செயலுக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, இந்த செயற்குழு கூட்டத்திற்கு வந்திருக்கும் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் என் வலி புரியும். தொண்டர்களை நினைத்து தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஆரம்பித்து விட்டோம்.

2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் தான் தேர்தலை சந்திக்க போகிறோம். சட்டமன்றத் தேர்தலில் ஏ.பி பார்ம்களில் கையெழுத்து போடும் உரிமை எனக்கு மட்டும் தான் உள்ளது. வெற்றி பெறும் வாய்ப்புள்ளவர்கள் விருப்பமணுவை கொடுக்க தயார் ஆகுங்கள் என்று கூறியுள்ளார்.