
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த சுயம்புலிங்கம்(43) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சுயம்புலிங்கத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் வீட்டிற்கு வரும்போது மது குடித்துவிட்டு முருகேஸ்வரியிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்காக பணம் வேண்டும் என மனைவியிடம் தொந்தரவு செய்வார்.
இதனால் இருவருக்கும் இடையே அதிகமாக சண்டை வரும். அதன் அடிப்படையில் சம்பவத்தன்று சுயம்புலிங்கம் வேலைக்கு செல்லாமல் மனைவிடம் குடிப்பதற்காக பணம் வேண்டும் என தகராறு செய்ததால் முருகேஸ்வரி திட்டியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சுயம்புலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுயம்புலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.